என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவராக என் கணவர் இல்லை... அதற்கு காரணம் இதுதான்... ஒரு பெண்ணின் கண்ணீர் கதை
திருமணமான புதிதில் ஒரு கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான உறவு மிகவும் அந்நியோன்னியமாக இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தை என்ற ஆனவுடன் பெண்களின் கவனம் முழுவதுமாக குழந்தை பக்கம் திரும்பி விடுகிறது. இது பெரிதாக தவறு என்று கூற முடியாது என்றாலும் இதுவே வாழ்க்கையின் எதார்த்தம்.
கணவருடன் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு எனக்கு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இருந்ததில்லை. என் பழைய வாழ்க்கையை என்னை எப்போதும் தொந்தரவு செய்தது. அவர் ஒரு சிறந்த உறுதுணை மற்றும் எந்த சூழ்நிலையிலும் எனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது. எனது முந்தைய உறவு எப்போதுமே இந்த சூழ்நிலையை எனக்கு தந்ததில்லை.
என் கணவருக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார். நான் எடையை இழக்க வேண்டும் என்றோ அல்லது அவர் கூறும் வழியில் செல்ல வேண்டும் என்றோ அவர் என்னை வற்புறுத்தவில்லை. நாங்கள் காதலித்த போதும் திருமணம் செய்துகொண்ட நாட்களும் எனக்கு மகிழ்ச்சியான தருணங்கள் ஆக இருந்தன. நான்கு வருட திருமண வாழ்க்கையை நாங்கள் மிகவும் சந்தோஷமாக கழித்தோம். பிடித்த இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்தோம். அதிக பார்ட்டிகளில் கலந்து கொண்டோம். நினைக்கும் போதெல்லாம் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தோம்.
குழந்தை பேறு
என் கணவருக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார். நான் எடையை இழக்க வேண்டும் என்றோ அல்லது அவர் கூறும் வழியில் செல்ல வேண்டும் என்றோ அவர் என்னை வற்புறுத்தவில்லை. நாங்கள் காதலித்த போதும் திருமணம் செய்துகொண்ட நாட்களும் எனக்கு மகிழ்ச்சியான தருணங்கள் ஆக இருந்தன. நான்கு வருட திருமண வாழ்க்கையை நாங்கள் மிகவும் சந்தோஷமாக கழித்தோம். பிடித்த இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்தோம். அதிக பார்ட்டிகளில் கலந்து கொண்டோம். நினைக்கும் போதெல்லாம் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தோம்.
குழந்தை பேறு
நான் கருத்தரித்து இருக்கிறேன் என்று உறுதி ஆனதும் கிட்டத்தட்ட பல மணி நேரத்திற்கு நான் அழுதேன். இத்தனை காலங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் முடிவுக்கு வருவது போல் தோன்றியது. அதுவரை எனக்கு குழந்தைப் பேறு என்பது ஒரு விளையாட்டாகவே இருந்தது. முடிந்த அளவுக்கு நாங்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களை மேலும் கடைபிடிக்க முயற்சி செய்தோம்.
அதிக பயணங்கள் தவிர மற்ற எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்தோம். ஆனால் நான் குழந்தை பெற்ற நாளிலிருந்து ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. திடீரென எனக்கு எல்லாமே என் மகன் தான் என்றாகிப் போனது. என்னுடைய கணவர் எனக்கு இரண்டாவது முக்கியமான நபராக மாறினார். அது தானாகவே நடந்தது அதைப் பற்றி எனக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை. எனக்கு கிடைத்த நேரங்களில் எல்லாம் நான் எனது குழந்தையை பற்றி சிந்திக்கவும் பேசவும் தொடங்கியிருந்தேன். முக்கியமாக நான் என் வேலையை விட்டு இருந்தேன். ஏனெனில் என் மகனை இன்னொருவர் கையில் கொடுக்க எனக்கு மனமில்லை.
அதன் பிறகு நானும் என் கணவரும் அரிதாக பேசிக்கொண்ட விஷயங்கள் என்றால், அது அவர் என் மகனுடன் அதிக நேரம் செலவழிப்பது இல்லை என்பதே ஆகும். ஆனால் அவர் எங்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக திருப்பி பதிலளித்தார்.
அதன் பிறகு என் கணவர் அவரது நண்பர்களுடன் அவரது நேரத்தை கழிக்கத் தொடங்கியிருந்தார். நான் எப்பொழுதும் என்னுடைய குழந்தையைத் தூங்க வைக்க வேண்டும் என்ற கவலையில் அவருக்கு ஒரு மனைவியாக இருப்பதிலிருந்து சிறிது விலகி இருந்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் அவரது எண்ணங்களை கூறுவதை நிறுத்தி விட்டார்.
இப்பொழுது என் மகனுக்கு மூன்று வயது ஆகிறது. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவர் என்றால் அது என் மகன் தான் என்று இப்போது என்னால் கூற முடியும். சில நேரங்களில் இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் எனது கணவரால் இதை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். எனது மகனை நேசிப்பது போல ஒரு தூய்மையான அன்பை என்னால் வேறு ஒருவரிடத்தில் வெளிப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.
இப்பொழுது என் மகனுக்கு மூன்று வயது ஆகிறது. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவர் என்றால் அது என் மகன் தான் என்று இப்போது என்னால் கூற முடியும். சில நேரங்களில் இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் எனது கணவரால் இதை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். எனது மகனை நேசிப்பது போல ஒரு தூய்மையான அன்பை என்னால் வேறு ஒருவரிடத்தில் வெளிப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.
🙏🙏🙏 Thank you 🙏🙏🙏
Comments
Post a Comment